தெலுங்கானாவில் தசராவை முன்னிட்டு 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தெலுங்கானாவில் தசராவை முன்னிட்டு 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Update: 2021-10-08 01:45 GMT
ஐதராபாத்,

தெலுங்கானாவில் தசரா பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு போக்குவரத்து துறை எடுத்துள்ளது.  இதன்படி, 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுபற்றி போக்குவரத்து மண்டல மேலாளர் வெங்கண்ணா கூறும்போது, மகாத்மா காந்தி பேருந்து நிலையம், ஜுபிளி மற்றும் பிற பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக, காலனி மற்றும் கல்வி நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  தசராவின் 9 நாட்கள் முழுவதும் இந்த வசதியை நாங்கள் அளிக்க உள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்