ஆந்திராவில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-11 14:18 GMT
அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 57 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 994 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், ஆந்திராவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 36 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 7 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்