பக்தர்கள் மீது வேகமாக மோதிய கார்: ஒருவர் பலி என தகவல்

மத ஊர்வலத்தில் கடந்துகொண்டவர்களின் மீது கார் வேகமாக மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-10-15 13:28 GMT
ராய்ப்பூர்,

சத்தீஸ்கார் மாநிலம் ஜஷ்பூரில் உள்ள பாதல்கானில் தசரா ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. கண்மூடித்தனமாக வந்த கார் பக்தர்கள் மீது மோதியதில்  ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்திற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டிவந்த காரில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அம்மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் "குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும். இறந்தவர்களின் ஆன்மாவுக்கு கடவுள் அமைதி தரட்டும்" என்று அவர் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்