உத்தரகாண்ட் கனமழை: பலி எண்ணிக்கை 79 ஆக உயர்வு

உத்தரகாண்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2021-10-29 11:20 GMT
டேராடூன், 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால், அம்மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், உத்தரகாண்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. 24 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 3 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்