சத்தீஷ்கரில் 14 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

சத்தீஷ்கரில் 14 நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.

Update: 2021-10-31 17:54 GMT
ராய்ப்பூர்,

சத்தீஷ்கர் மாநிலம் தண்டேவாடா நகரில் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் 14 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர்.

இவர்களில் சன்னா மார்கம் (வயது 21) என்ற நக்சலைடு, கடந்த 2017-ம் ஆண்டு 25 சி.ஆர்.பி.எப். வீரர்களை பலிகொண்ட நக்சலைடு தாக்குதலில் சம்பந்தப்பட்டவன் ஆவான். அவன் தலைக்கு ரூ.1 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நக்சலைட்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் போலீசாரின் அழைப்பை ஏற்று 14 பேரும் சரண் அடைந்ததாக போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த திட்டத்தின்கீழ், இதுவரை 454 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்