ஜான்சி முனை திட்டம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல்

உத்தரப்பிரதேச பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரத்தின் ஜான்சி முனை திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2021-11-19 03:26 GMT
புதுடெல்லி,

ஆத்ம நிர்பார் பாரத் என்னும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நமது நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்கள், முப்படைகளுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. டெல்லியில் இன்றூ நடைபெற உள்ள  விழாவில் முப்படைகளுக்கும், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தளவாடங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.

அந்த வகையில் அவர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள லகுரக போர் விமானத்தை விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரியிடம் முறைப்படி ஒப்படைக்கிறார்.

அதனை தொடர்ந்து  ரூ.400 கோடி மதிப்பில் உத்தரபிரதேச பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரத்தின் ஜான்சி முனை திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்