குஜராத்: வேன்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வேன்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-11-20 10:26 GMT
அகமதாபாத், 

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள காம்பாத்திற்கு எட்டு பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வாலானா கிராமத்திற்கு அருகே அவர்கள் பயணித்த வேன், டேங்கர் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. 

இந்த பயங்கர விபத்தில்  4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றொருவர் காயம் அடைந்து காம்பாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து அதிகாலை 5 மணியளவில் வடமன் மற்றும் பாவ்நகரை இணைக்கும் சாலையில் நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேன், சாலையின் தவறான பக்கத்தில் சென்றுகொண்டிருந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர், விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் காம்பத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்