உத்தர பிரதேசத்தில் 32 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி
உத்தர பிரதேசத்தில் 32 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கான்பூர்,
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து உள்ளன. எனினும், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் காணப்படுகின்றன. இந்த நிலையில், முதல்-மந்திரி அலுவலகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், 32 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.
அவர்களில் 16 பேர் கான்பூரில் சிகிச்சையில் உள்ளனர் என மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி இன்று தெரிவித்து உள்ளார்.