கேரளாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்தது

தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 44,638- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-11-29 13:47 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,382- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 5,779- பேர் நேற்று குணம் அடைந்த நிலையில், இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து  51 ஆயிரத்து 998- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்து 487 ஆக குறைந்துள்ளது.

தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 44,638- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  கொரோனா பாதிப்பால் திங்கள் கிழமை மட்டும் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,955- ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 666- பேரும், திருவனந்தபுரத்தில் 527- பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 477- பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள்.

மேலும் செய்திகள்