இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரமாக குறைந்தது

558 நாட்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

Update: 2021-12-07 04:31 GMT
புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு இறங்குமுகம் கண்டு வருகிறது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 48  ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 004 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 79 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 95 ஆயிரத்து 014 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 220  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 79,39,038 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்த்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,76,10,590 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்