நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்?

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே அதாவது நாளையுடன் முடித்துக்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2021-12-21 16:28 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது. வரும் 23 ஆம் தேதி வரை குளிர் கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே அதாவது நாளையுடன் முடித்துக்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  அரசு திட்டமிட்ட பெரும்பாலான அலுவல்களை நிறைவு செய்துவிட்டதால் நாளையுடன் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என பாராளுமன்ற வட்டார தகவல்கள் கூறுகின்றன. 

மேலும் செய்திகள்