காஷ்மீர் என்கவுண்ட்டர்: போலீஸ்காரர் வீரமரணம்; பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் போலீஸ்காரர் வீரமரணம் அடைந்துள்ளார். பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

Update: 2022-01-12 17:42 GMT


ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பரிவான் பகுதியில்  பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என உளவு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து, பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதில், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.  இந்த நிலையில், ரோகித் சிப் என்ற போலீஸ்காரர் வீரமரணம் அடைந்துள்ளார்.  இந்த என்கவுண்ட்டரில், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின்
பயங்கரவாதியை, படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்து உள்ளனர்.  பொதுமக்களில் 2 பேர் சிறிய அளவில் காயம் அடைந்து உள்ளனர்.  தொடர்ந்து என்கவுண்ட்டர் நடந்து வருகிறது என காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்