தொற்று அதிகரிக்கும் நிலையில் கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து

கர்நாடகாவில் தொற்று அதிகரிக்கும் நிலையில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

Update: 2022-01-21 11:56 GMT

பெங்களூரு,


கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 7ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வாராந்திர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இரண்டு வாரம் முடிந்த நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

அப்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இதுவரை அமலில் இருந்த வாராந்திர ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், தற்போது அமலில் இக்கும் இரவு 10 மணி முதல் மறு நாள் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவு வழக்கம் போல் அமலில் இருக்கும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோல், பெங்களூரு நகரில் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் வரும் 29-ந் தேதி (சனிக்கிழமை) வரை பள்ளிக்கூடங்கள் மூடியிருக்கும் என்றும் ஆனால், மாநிலம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்