கேரளாவில் 50 ஆயிரத்தை தாண்டிய இன்றைய கொரோனா பாதிப்பு

இன்றைய கேரளாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது

Update: 2022-01-25 12:54 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .இன்றைய கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது .கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 55, 475- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில்  கொரோனா பாதிப்பால் இன்று  70  பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும்,30,226- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,85,365- ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்