மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 507 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை சென்செக்ஸ் குறியீடு 507.41 புள்ளிகள் உயர்வடைந்து உள்ளது.
மும்பை
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 0.91 சதவீதம் அல்லது 507.41 புள்ளிகள் லாப நோக்குடன் உயர்வடைந்து 56,176.44 புள்ளிகளாக உள்ளது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 0.96 சதவீதம் அல்லது 159.74 புள்ளிகள் உயர்வடைந்து 16,837.80 புள்ளிகளாக உள்ளது.
இவற்றில் பொது துறை வங்கி, உலோகம் மற்றும் தானியங்கி துறைகள் தலா 1 சதவீதம் என்ற அடிப்படையில் அதிக லாபம் அடைந்துள்ளன.