மேகாலயாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

மேகாலயாவில் இன்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.

Update: 2023-08-14 18:21 GMT

கோப்புப்படம்

ஷில்லாங்,

மேகாலயாவில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இரவு 8.19 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் சிரபுஞ்சியிலிருந்து தென்கிழக்கே 49 கி.மீ தொலைவில் வங்காளதேச எல்லையில் உள்ள சில்ஹெட் அருகே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வடகிழக்கு பகுதி முழுவதிலும், வட மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளிலும், அண்டை நாடான வங்கதேசத்திலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம், பொருட் சேதம் குறித்த உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்