தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-07 18:45 GMT

டி.ஜே.ஹள்ளி:

பெங்களூரு சிவாஜிநகரை சேர்ந்தவர் மன்சூர் அகமது (வயது 22). இவர், பிரபல ரவுடி ஆவார். மன்சூர் அகமது மீது கொலை, கொள்ளை உள்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதற்கிடையில், வக்கீல் ஒருவரின் காரை வழிமறித்து பணம், பொருட்களை ரவுடி மன்சூர் அகமது கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. அந்த வக்கீல் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கனகநகருக்கு காரில் சென்று விட்டு வரும் போது, மன்சூர் அகமது மற்றும் கூட்டாளிகள், வக்கீல், அவரது குடும்பத்தினரை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றிருந்தார்கள். இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மன்சூர் அகமது, அவரது கூட்டாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடி மன்சூர் அகமதுவை டி.ஜே.ஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்