அசாம்: பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 7 பேர் மாயம்

அசாமில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் மாயமாகி உள்ளனர்.

Update: 2022-09-29 09:26 GMT

கவுகாத்தி,

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி மாணவர்கள், துப்ரி வட்ட அதிகாரி உள்ளிட்ட சுமார் 30 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், துப்ரியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள அடபாரி என்ற இடத்தில் படகு சென்றுகொண்டிருந்த போது, அங்கிருந்த பாலத்தின் மீது மோதி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுமார் 7 பேர் மாயமாகி உள்ளனர்.விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புக்குழுவினர் இதுவரை 15 பேரை காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்