சட்டப்பேரவை தேர்தல் 2023: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பின்னடைவு

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

Update: 2023-12-03 04:02 GMT

ஐதராபாத்,

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவிற்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது.

தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார். சந்திரசேகர ராவ், தான் போட்டியிட்ட கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.   

Tags:    

மேலும் செய்திகள்