சத்தீஷ்கார்: பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.

Update: 2024-05-10 14:02 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பிடியா கிராமத்தில் கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர். அவர்கள் 5 பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை தொடந்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 16-ந்தேதி, சத்தீஷ்காரில் உள்ள கன்கர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்