பா.ஜ.கவில் இன்று இணைகிறார் பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் இன்று பாஜகவில் இணைகிறார்.

Update: 2022-09-19 00:59 GMT

புதுடெல்லி,

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் இன்று பாஜகவில் இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அமரிந்தர் சிங் உட்கட்சி மோதலால் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று அவர் தனிக்கட்சி தொடங்கினார்.

அண்மையில் நடந்த பஞ்சாப் பேரவை தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார்.

இந்த நிலையில் அமரிந்தர் சிங் இன்று பாஜகவில் இணையவுள்ளார். தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இன்று இணைத்துக் கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்