தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுபுரம் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
கோப்புப்படம்
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில், இன்று தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுபுரம் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
இதில் சுமார் 6 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.