பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

பொருளாதாரத்தில் உலக அளவில் 10வது இடத்தில் இருந்த இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Update: 2024-02-24 02:17 GMT

கோப்புப்படம்

மகராஜ்கஞ்ச்,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டார். இதில் 40,011 பேருக்கு ரூ.1,143 கோடி கடன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

நல்ல நிலையிலான குடிமக்களின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடுதான் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பதாக அர்த்தம். அதன் மூலம் ஒவ்வொருவரும் பலனடைவார்கள்.

அந்தவகையில் உலக பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி தலைமையின் கீழ் 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடித்து விடும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்