ஜே.பி.நட்டா, எல்.முருகன் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு

குஜராத்தில் ஜே.பி.நட்டா உள்பட 4 பா.ஜ.க. வேட்பாளர்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

Update: 2024-02-20 12:21 GMT

காந்திநகர்,

15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்தை நிரப்ப வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி நிறைவடைந்தது.

இதன்படி குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஜே.பி.நட்டா உள்பட 4 பா.ஜ.க. வேட்பாளர்களும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அதேபோல் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட மத்திய தகவல் தொழில்நுட்ப இணை மந்திரி எல். முருகனும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்