சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று நிறைவுரை

சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று நிறைவுரையாற்ற உள்ளார்.

Update: 2023-04-25 23:58 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பல்லாண்டுகளுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பலர் இடம்பெயர்ந்தனர். இந்த இரு மாநிலங்களுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிப்பதற்காக, குஜராத் மாநிலம் சோம்நாத்தில், 'சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கடந்த 17-ந் தேதி இந்நிகழ்ச்சி தொடங்கியது. 10 நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது.

இதையொட்டி, நிறைவுநாள் நிகழ்ச்சியில், இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். இத்தகவலை பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்