பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

Update: 2022-08-17 01:05 GMT

புதுடெல்லி,

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த உரையாடலின் போது பிரான்சில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் காட்டு தீ குறித்த விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு , பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய சவால்களில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்