ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமில் தற்கொலை படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

ஜம்மு- ஜம்மு - காஷ்மீரில் ராணுவ முகாமில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது;

Update:2022-08-23 02:35 IST

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு - காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் பாராகல் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில், 11ம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் 'ஜெய்ஷ் - இ - முகமது' பயங்கரவாத இயக்கத்தின் தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் புகுந்தனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில், தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் உட்பட நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உதம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சத்பால் சிங் என்ற வீரர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்