கஞ்சா விற்க முயன்ற வாலிபா் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற வாலிபரை போலீசாா் கைது செய்துள்ளனர்.

Update: 2023-10-07 18:45 GMT

கோலார் தங்கவயல்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் சிலர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஆந்திரா-கர்நாடகா ஆகிய இருமாநில எல்லையில் சாந்திபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பையுடன் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பையையும் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அந்த பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அதை அவர் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததும், கோலார் தங்கவயலில் விற்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் கடத்தி வந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் உள்ள என்.டி.ராமராவ் காலனியை சேர்ந்த பால்ராஜ்(வயது 27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்