பன்வெல் ரெயில் நிலையம் அருகே பயங்கரம் பெண் குத்திக்கொலை; 2 பேர் கைது- காரணம் என்ன? போலீஸ் விசாரணை

பன்வெல் ரெயில் நிலையம் அருகே பெண்ணை குத்தி கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-18 14:29 GMT

மும்பை,

பன்வெல் ரெயில் நிலையம் அருகே பெண்ணை குத்தி கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குத்தி கொலை

ராய்காட் மாவட்டம் பன்வெல் விகிகர் மகாலெஷ்மி நகர் பகுதியை சேர்ந்த பெண் பிரியங்கா(வயது29). இவர் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பன்வெல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வந்த போது அங்கு வந்த ஒருவர் திடீரென கத்தியால் அப்பெண்ணை குத்த முயன்றார்.

இதனால் பிரியங்கா அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அந்த நபர் அவரை விரட்டி சென்று கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார்.

2 பேர் கைது

இதில் படுகாயமடைந்த பிரியங்காவை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியங்கா உயிரிழந்தார். இது குறித்து கண்டேஸ்வர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலையில் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதன் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நேற்று முன்தினம் 2 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்