தலைமை காவலர் பணி

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் டெ ல்லி போலீசில் தலைமை காவலர் (அமைச்சகம்) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Update: 2022-05-21 08:03 GMT

ஆண்கள் (503), முன்னாள் ராணுவ வீரர்கள் (56) பெ ண்கள் (276) என மொத்தம் 835 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் வேகமாக தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். 1-1-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வும் அனுமதிக்கப்படும். தகுதியான நபர்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான உடல் தகுதி, தேர்வு செய்யப்படும் விதம் உள்ளிட்ட விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-6-2022.

Tags:    

மேலும் செய்திகள்