இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.

Update: 2022-11-16 03:52 GMT

தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை, கடலூர் பகுதி மீனவர்களான அய்யப்பன், அருள்ராஜ், மீனாட்சி சுந்தரம் ஆகிய 3 மீனவர்களையும் கடந்த மாதம் 19-ந்தேதி இந்திய கடல் எல்லையில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கை நாட்டுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் இலங்கை கோர்ட்டு தமிழக மீனவர்கள் 3 பேரை விடுதலை செய்ததையடுத்து, புதுக்கோட்டை, கடலூர் மீனவர்கள் 3 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், 3 மீனவா்களுக்கும் அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய 3 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்