வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-28 08:04 GMT

மீஞ்சூர் அடுத்த வல்லூரில் தேசிய அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 யூனிட்டில் தலா 500 வீதம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் முதல் யூனிட்டில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று 3-வது யூனிட்டில் ஏற்பட்ட பாதிப்பால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரு யூனிட்டுகளில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்