புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-06 19:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் சோதனையிட்டனர். இதில், பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஓசூர் முருகேசன் (வயது 48), மத்திகிரி சீனிவாச ரெட்டி (48), பாகலூர் நாகேஷ் (40), பேரிகை வடிவேல் (38), பர்கூர் குமார் (29), கந்திகுப்பம் சக்திவேல் (44), மாதப்பன் (50), நாகரசம்பட்டி முருகன் (55), போச்சம்பள்ளி சுரேஷ் (55), குப்பன் (65), ராயக்கோட்டை சரவணன் (40), கல்லாவி குமரேசன் (64), மத்தூர் சிவகுமார் (32) ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 3,569 ரூபாய் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்