கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது

மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை: கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது போலீசார் நடவடிக்கை

Update: 2022-12-12 18:45 GMT

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை செய்வோரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்கள் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த கடலூர் புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ற அருண்குமார், சூர்யா, சதீஷ்குமார் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக சோமு, கனகராஜ், சுந்தரேசன், செல்வம், கிருபாகரன், ஆகாஷ், முகமது இஸ்மாயில் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். குட்கா விற்பனை செய்ததாக நெல்லிக்குப்பம் கமல்புதின் (வயது 63), மங்கலம்பேட்டை அக்பர்அலி (51), ஜெயசங்கர் மனைவி சிவகாமி (34) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்