அனுமதியின்றி ஊர் வலம்; இந்து முன்னணியினர் 17 பேர் கைது

வடமதுரை அருகே இந்து முன்னணியினர் அனுமதி இன்றி ஊர்வலம் செல்ல முற்பட்டனர்.

Update: 2022-08-15 07:07 GMT

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலூரில் இந்து முன்னணியினர் அனுமதி இன்றி ஊர்வலம் செல்ல முற்பட்டனர். இதில்இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமையிலான 17 பேர் சென்றனர்.

 

போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் ஊர்வலம் செல்ல முற்பட்டவர்களை வடமதுரை-இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் கைது செய்து வடமதுரை தனியார் மண்டபத்தில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்