பழனி முருகன் கோவிலில் ரூ.2.20 கோடி உண்டியல் காணிக்கை - கோவில் நிர்வாகம் தகவல்

கடந்த 25 நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், 974 கிராம் தங்கம், 9,111 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.

Update: 2022-05-19 12:42 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்டவை காணிக்கைகளாக கிடைத்துள்ளன.

அங்கு கடந்த 25 நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், அதில் 974 கிராம் தங்கம், 9,111 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது. மேலும் 2 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரத்து 120 ரூபாய் பணமும், 340 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்