வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-10-13 23:50 IST

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தை ேசர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் அஜய்குமார்(வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த உடையார்பாளையம் கைக்களநாட்டர் தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் வினோத் (20), நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்த காத்தரூபன் மகன் குமரன்(23) ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2,500-ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்