2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

Update: 2023-01-12 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 16-ந் தேதி திருவள்ளுவர் தினமும், 26-ந் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினங்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்