கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-09-20 23:30 IST

அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியில் அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (வயது 24), அரக்கோணம் அகன் நகரை சார்ந்த அஜித் (25) என்பதும், கஞ்சா வைத்திருந்தம் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்