2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-09-23 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையை சேர்ந்தவர்கள் தியாகராஜன் மகன் பாலாமணி(வயது 32), ரவி மகன் குகன்(24). இவர்கள் இருவரும் தனியார் நிதி நிறுவன ஊழியரான விழுப்புரம் குப்புசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த மரியபிரபாகரனை கொலை செய்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, இவர்கள் இருவரும் சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் பாலாமணி, குகன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து பாலாமணி, குகன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள்.இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்