மாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை எதுவும் செய்ய முடியாது -பொன் ராதா கிருஷ்ணன்

மாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது என மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் கூறினார்

Update: 2017-01-18 07:24 GMT
சென்னை

சென்னையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி பொன்ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

மாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன்" உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். ஜல்லிக்கட்டுக்காக சட்டம் கொண்டு வந்தாலும் அதை உச்ச நீதிமன்றம் தடை செய்ய முடியும்.

மேலும் அவர், மாணவர்களின் போராட்டத்தில் பிற இயக்கத்தினர் தலையிடுவது ஏன் என கேள்வி எழுப்பினார். தடை செய்யப்பட்ட ஒன்றை நடத்தினால் அதற்குப் பெயர் போராட்டம்தான்.
என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்