ஒடிசா நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
ஒடிசா மாநில ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்த சத்ருஹான புஜாரியை, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
ஒடிசா மாநில ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்த சத்ருஹான புஜாரியை, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் இன்று காலையில் புதிய நீதிபதி சத்ருஹான புஜாரி பதவி ஏற்கிறார்.
அவருக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய நீதிபதி பதவி ஏற்பதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்கிறது.