நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க உத்தரவு

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. #SterliteProtest

Update: 2018-05-23 13:55 GMT

சென்னை,


தூத்துக்குடியில் போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவலை தடுக்கும் வகையில் இணைய சேவையை முடக்க தமிழக உள்துறை உத்தரவிட்டு உள்ளது. 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களில் இன்று முதல் 27-ம் தேதி வரையில் இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இணைய சேவை முடக்கம் காரணமாக வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் செயல்படாது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழக அரசு இணைய சேவை முடக்கத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்