காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதி விபத்து; 2 பேர் பலி
காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரத்தின் மாமல்லபுரத்தில் விபத்தில் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றும் பணி நடந்தது. இந்த நிலையில் அந்த சாலை வழியே வேகமுடன் வந்த கார் ஒன்று ஆம்புலன்ஸ் மீது மோதி உள்ளது.
இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் ஹேமசந்திரா, ஏகாம்பரம் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்து உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.