அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் திமுக கண்டன பொதுக்கூட்டம்
அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
சென்னை,
திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும். பூந்தமல்லியில் பொருளாளர் துரைமுருகன் பேசுகிறார். திருத்தணியில் டி.ஆர்.பாலு, மதுரையில் திருச்சி சிவா, ஒட்டன்சத்திரத்தில் ஆ.ராசா, திருச்சியில் பொன்முடி ஆகியோர் பேசுவதாக திமுக அறிவித்துள்ளது.