இடைத்தேர்தலைக் கண்டு அதிமுக பயப்படுகிறது - பிரேமலதா விஜயகாந்த்

இடைத்தேர்தலைக் கண்டு அதிமுக பயப்படுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-30 13:15 GMT
சென்னை,

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியார்களிடம் கூறியதாவது:

டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இடைத்தேர்தலைக் கண்டு அதிமுக பயப்படுவதாகவும், 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலோ, இடைத்தேர்தலோ வரப்போவதில்லை. நாடாளுமன்ற தேர்தலோடு பொதுத்தேர்தலும் வரப்போகிறது என்பது தான் உண்மை.

தமிழகத்தின் தற்போதைய நிலை மாற லஞ்ச ஊழல் இல்லாத தேர்தல் வரவேண்டும், நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்