கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்

கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2018-11-12 11:49 GMT
கோவை,

கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு புதிய துணைவேந்தராக டாக்டர் என். குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.  இதன்படி துணைவேந்தராக பொறுப்பேற்ற நாளில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பில் அவர் பதவி வகித்திடுவார்.

புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட இவர் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர்.  22 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  இதுவரை 8 புத்தகங்கள் எழுதியுள்ளார்.  13 பேருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

கோவை வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் நியமன ஆணையை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் வழங்கினார்.

மேலும் செய்திகள்