கதவுகள் அடைக்கப்பட்ட பிறகும் திமுகவுக்கு ஆதரவாக வைகோ பேசியிருப்பது அவரது பண்பு - பொன்.ராதாகிருஷ்ணன்
கதவுகள் அடைக்கப்பட்ட பிறகும் திமுகவுக்கு ஆதரவாக வைகோ பேசியிருப்பது அவரது பண்பு என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் இரும்பு மேம்பால பணிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியார்களிடம் பேசியதாவது:
போக்குவர்த்து நெரிசலை சமாளிக்க ரூ128 கோடியில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேகதாது விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவதன் உள்நோக்கம் தெரியவில்லை.
கதவுகள் அடைக்கப்பட்ட பிறகும் திமுகவுக்கு ஆதரவாக வைகோ பேசியிருப்பது அவரது பண்பு. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது என்பது தமிழகத்திற்கு தீங்கு. புயல் பாதிப்பில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுவது விதண்டாவாதத்திற்கே.
இவ்வாறு அவர் கூறினார்.