விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆலோசனை - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தியதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2018-12-10 18:44 GMT
சென்னை,

டெல்லியில் நடந்த எதிர்கட்சித் தவைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில், “ ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தற்போது ராஜினாமா செய்திருக்கிறார். இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.விவசாயிகள் மீது அக்கறை இல்லாமல் மத்திய அரசு செயல்படுகிறது. மேகதாது அணை குறித்து தேவகவுடாவுடன் விவாதித்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்