தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-22 07:17 GMT
சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- “

தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. தலைமை செயலகத்தில் சாமி கும்பிட்டதில் என்ன தவறு? இதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. 

அரசின் நிதி நிலையை பொறுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  யார் நினைத்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. கோடநாடு விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை.  நடிகர் அஜித்தின் தைரியம் பாராட்டத்தக்கது, அஜித்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்